நமது தளத்தில் "பணம் பற்றிய சுயமுன்னேற்ற கட்டுரைகளை" அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன்.இதன்பிறகு சுயமுன்னேற்றத்திற்கென்றே தனியாக ஒரு தளமும் துவங்கி அதிலும் எழுதி வந்திருக்கிறேன்.சில காலமாக நீங்கள் இது போல "பணம்" பற்றி எதுவூம் எழுவதில்லையே என்று நமது தளத்தின் வாசகர்களும் முகநுரல் அன்பர்களும் கேட்டுக் கொண்டதால் இதனை எழுதுகிறேன்.
நவம்பர் 8ம் தேதியை மறந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறௌம்.
நாட்டையே புரட்டிப் போட்ட "பணம்" பற்றிய அந்த அறிவிப்பு இன்னமும் நாட்டில் சுமுகநிலையை கொண்டு வரவில்லை.சம்பாதித்த சொந்த பணத்தையே தொலைத்து விட்டு தேடுவது போல வங்கிக் க்யூ வரிசையிலும் பணமில்லாத ஏடிஎம்மிலும் அனைவரும் அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் பணம் பற்றிய சுயமுன்னேற்றக் கட்டுரையை எழுதினால் நியாயமாகவூம் நாகரீகமாகவூம் இருக்காது என்றே அது போன்ற சுயமுன்னேற்றக் கட்டுரைகளை எழுதுவதை தவிர்த்து வந்தேன்.
இப்போதும் நிலைமை இன்னும் சரியாகிவிடவில்லை.உண்மையைச் சொன்னால் மற்றவர்கள் போலவே இந்த பணமுடக்கத்தால் நாமும் கூட நடைபிணம் போலத்தான் மாறிப்போனோம்.அனைவரும் இதிலிருந்து மீண்டும் வருவார்கள் என்றே பிரார்த்திக்கிறௌம்.
இனி பணம் பற்றிய சுயமுன்னேற்றக் கட்டுரை!
கீழே வரும் வாசகத்தை நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.எங்காவது பார்த்திருப்பீர்கள்.அட்லீஸ்ட் ஆட்டோக்களின் பின்னாலாவது பார்த்திருப்பீர்கள்.
அந்த புகழ்பெற்ற வாசகம் இதுதான்.
"கேளுங்கள் கொடுக்கப்படும்"
கேட்டால் கிடைக்கும் என்பது பற்றி நிறைய பேர் நிறைய விதத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.ஒரு விஷயம் அல்லது பொருள் வேண்டும் என்று கடவூளிடம் அல்லது இயற்கையிடம் கேளுங்கள் அது என்றாவது ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும் என்பதுதான் அவர்கள் சொல்லும் கருத்தின் சுருக்கம்.
கேட்டால் கிடைக்கும் என்பது நிஜம்தான்.
எஃஎம் ரேடியோ ஜாக்கிகள் கூட உங்களை தொடர்ந்து தங்களது ஒலிபரப்பை கேட்டுக் கொண்டே வைப்பதற்காகத்தான் "கேளுங்க.கேளுங்க.கேட்டுக் கொண்டே இருங்க" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
கேட்டால் கிடைக்கும் என்பது சரிதான்.
என்றைக்கு கேட்பது.என்றைக்கு கிடைப்பது.
சொடுக்கு போடும் நேரத்தில் கூகுளில் தேடும் நேரத்தில் கேட்டதெல்லாம் கிடைத்தால் எப்படி இருக்கும்.பெரும் சிக்கலாக இருக்கும் என்பதுதான் உண்மை.எதைக் கேட்டாலும் தரும் கற்பக மரத்தின் அடியில் கண்டதையூம் கேட்டு கடைசியில் புலி வந்து அடித்து செத்துப் போன பேராசைக்காரனின் கதையை சிறுவயதில் நீங்கள் கூட படித்திருப்பீர்களே.அதனால்தான் கடவூளோ இயற்கையோ நீங்கள் கேட்ட எதையூம் கேட்டவூடனே தருவதில்லை.எதற்கும் ஒரு கால நேரம் இருக்கிறது என்பார்கள்.கால நேரம் இருக்கிறது என்பதை விட நமது நேரத்திற்கும் அதாவது கடிகார நேரத்திற்கும் "காலத்தின் கடிகார" நேரத்திற்கும் நேர வித்தியாசம் இருக்கிறது.இந்த நேர வித்தியாசம் உங்களது நன்மையைக் கருதியே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
கேட்டால் கிடைக்கும் என்பது பழசு.
இப்போது புதிதாக நான் கண்டுபிடித்ததை உங்களுக்காகச் சொல்கிறேன்.
"நினைத்தாலே கிடைக்கும்"
ஏதாவது ஒன்றை அது வேண்டுமென்று நீங்கள் நினைத்தாலே கிடைத்து விடும்.அதெப்படி கிடைக்கும்.நினைத்தால் கிடைத்து விடுமா? அதற்காக உழைக்க வேண்டாமா?அதனை வாங்க பணம் வேண்டாமா?
நான் பணத்தைப் பற்றிதானே இந்த கட்டுரைகளில் உங்களுக்காக எழுதி வருகிறேன்.ஒரு சொகுசுக்காரை நீங்கள் பார்த்தால் கூட அதை சும்மா வேடிக்கை பார்ப்பதோடு நின்று விட்டால் உங்களிடம் கோடி கோடியாக பணம் இருந்தால் கூட அந்த காரை உங்களால் வாங்க முடியாது.ஒரு கார் வாங்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படும் போது 'கார்' என்பது ஒரு படமாக பொருளாக உங்களது மனக்கண்ணில் தெரியாமல் "கார்" என்ற இரண்டு எழுத்துக்களாகப் பதிந்தாலும் உங்களால் அந்த காரை வாங்க முடியாது.ஆனால் கார் என்பதை ஒரு வசீகரமான பொருளாக படம் போல இன்னும் சொல்லப் போனால் திரைப்படக் காட்சி போல நீங்கள் நினைத்தால் உங்களது மனம் இது நாம வாங்க வேண்டிய பொருட்களில் ஒன்று என்று உங்களால் வாங்க வேண்டிய பொருட்களுக்கான பட்டியலில் சேர்ப்பித்து விடும்.அதன்பிறகு உங்களை உங்களது மனம் உங்களது வெளி மனது அறியாமல் துரண்டிக் கொண்டே இருக்கும்.அதன்பின் அது ஒரு நாள் நிஜமாகவே நடந்து விடும்.உங்களது போர்டிகோவில் அந்த கார் வந்து நிற்கும்.
கார் மட்டுமல்ல.
உங்களுக்கு வேண்டுகிற எதையூம் சும்மா நினைத்துப் பாருங்கள்.அந்த நினைப்பு வெர்பலாக இல்லாமல் விஷூவலாக இருக்கட்டும்.ஒரு விடியோ காட்சியின் டீஸராக இருக்கும்.
அப்படி நினைக்கிற எதுவூம் நிச்சயம் கிடைத்து விடும் என்பது எனது அனுபவ உண்மை.
உங்களுக்கும் அது போல பெரும் பணம் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.மனதார விஷூவலாக நீங்களும் பெரும் பணத்தை அடைய வேண்டுமென்று விரும்புகிறேன்.
நீங்களும் நினையூங்கள்.நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுக்கு தெரிந்த அனைவரும் இது போல பயன்பெற வேண்டுமென்று நினைக்க ஆரம்பியூங்கள்.அப்படி எல்லோரும் நினைக்க ஆரம்பிக்கும்போது நவம்பர் மாதம் சுனாமி போல வந்த "டீமானிட்டைசேஷன்" இனி "ரீமானிட்டைசேஷனாக" மாறி விடும்.
பணம் எல்லா இடத்திலும் எல்லோருக்கும் கிடைக்க ஆரம்பித்து விடும்.
ConversionConversion EmoticonEmoticon