கதவை திற காசு வரட்டும் - 9
அண்மையில் முகப்புத்தகத்தில் உரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு அன்பர் ஒரு கேள்வியைக் கேட்டார்.இதுவரைக்கும் உள்ள பணம் அனைத்தையூமே இழந்த ஒருவர் மறுபடி குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரி எந்த ஒரு வருமானமுமே இல்லாத ஒருவர் பங்குச்சந்தையில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க முடியூமா என்று கேட்டார்.
முடியூம் என்றேன்.
அதெப்படி என்ற மறுபடியூம் கேட்டார்.
முதலீடு செய்வதற்கென்று தனியாக பணம் ஏதும் இல்லாமல் பணத்தை சந்தையில் முதலீடு செய்து லட்ச லட்சமாக பணம் சம்பாதிக்கலாம் என்று லாஜிக்குடன் விளக்கியபிறகுதான் அவர் சமாதானமானார்.அத்துடன் முகப்புத்தகத்தில் எனது நண்பராகவூம் ஆகி விட்டார்.
இப்போது அது போன்ற ஒரு பணமுதலீட்டுத் திட்டத்தை உங்களுக்காக சொல்லிக்கொடுக்கிறேன்.பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கென்று தனியாக பணம் எதுவூம் போட வேண்டாம்.உங்களிடமிருந்தே உங்களுக்கான பணத்தை எப்படி எடுத்துக் கொண்டு அதை சந்தையில் கையாள்வது என்றுதான் இப்போது சொல்லப்போகிறேன்.
இது மிகவூம் சுலபமான முறையாகும்.யார் வேண்டுமானாலும் செய்யலாம்.கொஞ்சம் பொறுமை மட்டும் இருந்தால் போதும்.உங்களது சட்டைப் பாக்கெட்டில் அடுத்தவர் கை வைக்கும் முன்பு நீங்களே கை வைத்து விட வேண்டும்.அவ்வளவூதான்.
எப்படி?
தினம் வெளியில் போய் விட்டு மாலையில் வீடு திரும்பும்போது உடைகளை கழற்றி வைத்து விட்டு வேறு உடைக்கு மாறும்போது சட்டைப் பாக்கெட்டை பாருங்கள்.உங்களது பாக்கெட்டில் உள்ள பணத்தை எண்ணுங்கள்.ஏன் இப்போதே கூட எண்ணிப்பாருங்கள்.அந்த பணத்தில் பின்னமாக()உள்ள பணத்தை தனியாக ஒரு பிக்கி உண்டியலிலோ அல்லது டப்பாவிலோ போட்டு வைத்து விடுங்கள்.
பின்னமாக என்றால்?
உதாரணமாக பான்ட் பாக்கெட்டிலும் சட்டைப் பாக்கெட்டிலும் உள்ள பணத்தை எடுத்துப் பார்த்தால் ரூ 527.50 காசுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.இதில் பின்னமாக உள்ள தொகை ரூ 27.50காசுகள்தான்.இந்த ரூ 27.50 காசுகளைத்தான் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்கிறேன்.மறுநாள் இதே போல பாருங்கள்.அன்றைக்கு ரூ 702.00மட்டும்தான் இருக்கிறது என்றால் இதிலுள்ள ரூ 2.00என்பதுதான் பின்னமாக உள்ள தொகை.வெறும் ரூ 2.00தானே என்று நினைக்காதீர்கள்.இதையூம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.இன்னொரு நாள் எடுத்துப் பார்க்கும்போது ரூ 496 இருக்கிறது என்றால் இதில் உள்ள ரூ 96 என்ற தொகையைத்தான் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.ரூ 96 என்பது கிட்டத் தட்ட ரூ 100 ஆயிற்றே.இதையா எடுத்து வைக்க வேண்டும்.நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமே என்று மட்டும் நினைக்காதீர்கள்.அது இந்த திட்டத்தின் இயல்பை பாதிக்கும்.
ஒரு ஆன்லைன் டிமேட் கணக்கை முதலில் துவக்கி வைத்து விடுங்கள்.அதன்பின் ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமையன்று இந்த ஒதுக்கி வைத்த தொகையை எடுத்து மொத்தமாக எவ்வளவூ தேறுகிறதோ அதற்கு ஈடான தொகையை உங்களது வங்கிக் கணக்கிலிருந்து உங்களது ஆன்லைன் டிரேடிங் அக்கவூன்ட்டிற்கு மாற்றி விட்டு அடுத்தநாளான அதாவது மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று நன்கு தேர்ந்தெடுத்த ஷேர்களாக வாங்கி வைத்து விடுங்கள்.
ஏன் கடைசி வெள்ளிக்கிழமை?
பொதுவாக பங்குச்சந்தையில் கடைசி வியாழக்கிழமையன்று எஃப்அன்ட்ஓ (டெரிவேட்டிவ்) கான்ட்ராக்ட் முடிவடையூம் நாள் என்பதால் அன்றைக்கு சந்தை முழுவீச்சுடன் (மேலேயே அல்லது கீழேயோ) இருக்கும்.அதற்கு அடுத்தநாள் சந்தையில் காற்றாடும்.அதனால் கடைசி வெள்ளிக்கிழமையன்று சந்தையில் பங்குகள் மலிவான விலைக்கு கிடைக்கும்.அதுமில்லாமல் வெள்ளிக்கிழமையன்று நீங்கள் பங்குகளை வாங்குவதால் உங்களது முதலீடு வளரும்.அதுவூம் வெள்ளிக்கிழமையன்று கண்டிப்பாக பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணிக்குள் நீங்கள் பங்குகளை வாங்கி விட வேண்டும்.இப்படியே வாங்கி சேர்ந்து வரும் பங்குகளை விற்க வேண்டாம்.பங்குகளை வாங்குவதை இரண்டு விதமாகச் செய்யலாம்.
ஒரே பங்கினை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு விலைகளில் (எஸ்ஐபி போல) வாங்கிக்கொண்டே வரலாம்.இதில் சராசரி விலை கிடைக்கும்.அல்லது ஒவ்வொரு மாதமும் வெவ்வோறு பங்குகளை வாங்கிக் கொண்டு வரலாம்.இதில் சராசரி லாபம் கிடைக்கும்.
ஆன்லைன் டிரேடிங் கணக்கு துவங்கிட விருப்பமாக இருந்தால் bullsstreet.com@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.நமது தளத்தில் நடத்தப்படும் தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்து படித்து விட்டு இந்த முதலீட்டுத் திட்டத்தை செய்தால் அதிகமான லாபம் தரும் பங்குகளை வாங்கும் ரகசியத்தையூம் நீங்கள் கற்றுக் கொண்டு விடுவீர்கள்.விபரங்களுக்கு மின்னஞ்சலில்(bullsstreet.com@gmail.com) தொடர்பு கொள்ளுங்கள்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get 'top trading scrips'
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக
(10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).புத்தகம் வேண்டுவோர் என்ற
bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon