நம்முடைய வாழ்க்கைச் சூழலில் ஜோதிடம், ஜாதகம் என்பது திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பதற்கும், வேலை கிடைக்குமா என்று பார்ப்பதற்கும் பிசினஸ் துவங்க நாள் பார்ப்பதற்கும், திருமணமானபின் குழந்தை பிறக்காமலிருந்தால் காரணத்தை ஆராய்ந்து பரிகாரங்கள் செய்யவூம் ஒன்று டெம்ப்ளேட்டாகத்தான் இருக்கிறது.
பிசினஸையூம் உத்யோகத்தையூம் விட்டு விடுவோம்.அவற்றில் மாற்றங்கள் என்பது எப்போதாவதுதான் வரும்.ஆபீசில் பணிபுரியூம் ஒருவருக்கு மோசமான மேலதிகாரி அமைந்து விட்டால் அவர் இடமாற்றம் பெற்று செல்லும் வரைக்கும் கஷ்டம்.அவர் இடமாற்றம் பெற்று போனபிறகு நிலைமை மாறி விடும்.பிசினசில் போட்டி இருக்கிறது என்று நினைத்தால் அதுவூம் ஒரு கால கட்டத்திற்கு பிறகு மாறி விடும்.
எனக்குத் தெரிந்து எங்களது ஏரியாவில் ஒரு பாரம்பரியமான ஹோட்டல் இருக்கிறது.ஒரே மாதிரியான மெனுவைத்தான் எப்போதும் வைத்திருப்பார்கள்.ஒரே மாதிரியான முகத்துடன்தான் பரிமாறுவார்கள்.அந்த பகுதியில் வேறு ஹோட்டல்கள் கிடையாது.வேறு வழியில்லாமல் அங்கே மக்கள் செல்வார்கள்.அந்த ஹோட்டலுக்கு நேர் எதிரே புதிதாக ஒரு ஹோட்டல் வந்தது.மக்கள் புதிய ஹோட்டலில் குவிய ஆரம்பித்து விட்டார்கள்.புதிய ஹோட்டலின் சுவை, சுகாதாரம், புதிது புதிதான மெனுக்கள் என்று எதுவூம் காரணம் இல்லை.பழைய ஹோட்டலின் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பே இந்த ஹோட்டலின் மீது பிடிப்பாக மாறிப்போனது. புதிய ஹோட்டல்காரர்கள் பந்தாவாக வலம் வந்தார்கள்.Click here to get the list of top performing sharesஆனால் பழைய ஹோட்டல்காரர்கள் போலத்தான் இவர்களும் ஒரே மாதிரியான மெனுக்கள் ஒரே மாதிரியான சுவை.ஒரே மாதிரியான பரிமாறுதல் என்று சலிப்படைய வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மக்கள் பழைய ஹோட்டலுக்குச் செல்லாமல் பொறுத்துக் கொண்டிருந்தார்கள்.அப்போது ஒரு கிலோ மீட்டர் தள்ள ஒரு மெஸ் இருந்தது.அந்த மெஸ் ஒரு சந்துக்குள் இருந்தது.அவர்கள் மெயின்ரோட்டில் இருந்த ஒரு பெரிய விறகுக்கடையை காலி செய்து விட்டு அந்த இடத்தில் தங்களது மெஸ்ஸை மிக விரிவாக அமைத்து விட்டார்கள்.
அது ஹோட்டல் இல்லை.மெஸ்தான்.ஆனால் கனிவான உபசரிப்பு.வித விதமான மெனுக்கள்.மக்கள் கூட்டம் இப்போது இரண்டாவது ஹோட்டலை விட்டு விட்டு இந்த மெஸ்ஸை பெரிய ஹோட்டல் போலாக்கி விட்டனர்.
பிசினசில் இது போல்தான் ஆனால் எப்போதாவதுதான் நடக்கும்.
ஆனால் பங்குச்சந்தை என்பது தினம் தினம் மாறுதலுக்குரியது.நம் நாட்டு அரசியல் சூழ்நிலை மட்டுமல்லாது உலக நாடுகளின் அரசியல் சூழ்நிலை அங்கேயூள்ள வேலைவாய்ப்பு, புள்ளி விபரம்(weekly data) போன்றவையூம் நம் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடியவை.
கிரகங்களும் (சனி, குரு நீங்கலான மற்ற கிரகங்கள்) அடிக்கடி மாறக்கூடியவை.அரசின் கொள்கைகளும் அறிவிக்கப்படும் டேட்டாக்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கக் கூடியவை.இதற்கு ஏற்றாற்போல உங்களது சுயஜாதகமும் அதிலுள்ள கிரகங்களின் ஆட்சி, உச்சம், நீச்சம் போன்றவையூம் சந்தையில் நீங்கள் செய்யக் கூடிய டிரேடிங்கில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
நன்றாக நினைவூபடுத்திப் பாருங்கள்.ஒரு பங்கை வாங்கி வைத்திருப்பீர்கள்.உங்களுக்கே நன்றாக தெரியூம்.அந்த பங்கு இன்னும் நன்றாக மேலே ஏறும் என்று.திடீரென்று ஒருநாள் சும்மா கணினித்திரையில் அந்த பங்கின் விலை என்னவாக இருக்கிறது என்று பார்ப்பதற்குத்தான் உட்கார்ந்திருப்பீர்கள்.ஒரு சின்ன சறுக்கல் அன்றைக்குப் பார்த்து தென்படும்.மனதில் ஒரு நெருடல் வரும்.அப்போது பார்த்து சிஎன்பிசி போன்ற டிவியில் யாராவது அந்த பங்கைப் பற்றி நெகட்டிவ்வாக சொல்லி வைப்பார்கள்.Click here to go to main website to get stock tips
நன்றாகவே தெரியூம்.அந்த பங்கு இன்னும் கும்மென்று மேலே ஏறுமென்று.ஆனால் நீங்களாகவே அந்த பங்கை அன்றைய தினம் விற்று விட்டு வந்து விடுவீர்கள்.
இதற்கு காரணம் என்ன?
உங்களது அவசர முடிவா என்றால் நிச்சயம் கிடையாது.அன்றைக்கு பார்த்து உங்களது ஜாதகத்திலுள்ள கிரகங்கள் கைவரிசை காட்டியிருக்கின்றன.நீங்கள் பலியாடு போல போய் மாட்டிக்கொண்டிருந்திருக்கிறீர்கள்.
சிலருக்கு எப்போது பார்த்தாலும் கமாடிட்டி மார்க்கெட்டிலேயே அடி விழுந்து கொண்டிருக்கும்.என்ன என்று பார்த்தால் கோல்டு மெகாலாட் வாங்கி டிரேடு செய்து கொண்டிருந்திருப்பார்.அல்லது ஒரே நேரத்தில் தங்கம், வெள்ளி, தாமிரம் என்று கலந்து கட்டி வாங்கியிருந்திருப்பார்.இவற்றின் மொத்த பலன் அன்றைக்கு ஜாதகப்படி பாதகமாக இருந்திருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால் அதுவூம் அஷ்டவர்க்கம் போட்டுப் பார்த்தால் உலகிலுள்ள அத்தனை மனிதர்களுக்கும் கூட்டுத்தொகை ஒரே எண்ணிக்கையில்தான் வரும்.அப்புறம் ஏன் சிலர் பங்குச்சந்தையில் பந்தாவாக பணத்தை அள்ளுகிறார்கள்.பலர் பங்குச்சந்தையில் படுகுழியில் விழுகிறார்கள் என்று தோன்றும்.
உங்கள் ஜாதகத்தில் நிச்சயம் சில பாசிட்டிவ்வான விஷயங்கள் இருக்கும்.அது தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டு உதவி செய்யக் கூடிய கிரகங்களின் துணையூடன், டிரேடிங் செய்து பார்த்தீர்களானால் அப்புறம் நஷ்டமே வராது.
பணம்..பணம்தான் வந்து கொண்டே இருக்கும்.
பயன்படுத்திக் கொள்வது உங்கள் இஷ்டம்.எனவே பங்குச் சந்தையில் பணம் பண்ண வேண்டுமானால் உங்களது ஜாதகத்தை வெளியே எடுங்கள்.வெளியே எடுத்தால் மட்டும் போதாது.ஒவ்வொரு ஆண்டும் அப்போதைய சூழ்நிலைக்கேற்ப(முடிந்தால் வருடத்திற்கு இரு தடவையாவது) டிரேடிங் முறையை மாற்றி வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.வெற்றி கிடைக்கும்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get top performing shares list
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon